என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபல தெலுங்கு குணசித்ர நடிகர் ராஜபாபு. ஐதராபாத்தில் வசித்து வந்த ராஜபாபுவுக்கு கடந்த சில நாட்களாக, உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருடைய மறைவிற்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜபாபு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரபுபேட்டாவைச் சேர்ந்தவர். 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மற்றும் ஜெயபிரதா நடித்த ஊரிக்கு மோனகாடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 60க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர மற்றும் காமெடி வேடங்களில் நடித்தார்.
வெங்கடேஷ், மகேஷ்பாபு நடித்த சீதம்மா வாகிட்லோ ஸ்ரீமல்லே செட்டு, மகேஷ்பாபுவின் பிரம்மோத்சவம், வெங்கடேஷ், த்ரிஷா நடித்த ஆடவரி மாட்லாக்கு அர்த்தலே வேருலே, சமுத்திரம், மல்லி ராவா போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு அம்மா என்ற தொடரில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றார்.