இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவரான பூஜா ஹெக்டே அதன்பிறகு தெலுங்கில் அதிகமாக நடித்து வந்தவர் இரண்டு ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அந்தவகையில் மும்பை பெண்ணான பூஜா ஹெக்டே, தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் கூறுகையில், நான் மும்பை பெண்ணாக இருந்தாலும் பாலிவுட்டில் கூட என்னை தெலுங்கு நடிகை என்று தான் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளேன். அங்கு தான் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மும்பையில் என்னை தெலுங்கு பெண் என்று அழைப்பதை பெருமையாக கருதுகிறேன். அந்த அளவுக்கு தெலுங்கு சினிமா எனக்கு மரியாதை அளித்து, என்னை ஒரு நடிகையாக வளர்த்து விட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே அந்த கதாபாத்திரமாக மாறி உணர்வுப்பூர்வமாக நடித்து வருகிறேன் என்கிறார்.