விமர்சனம்
அ நிறம் | அளவு
இது ஒரு பிளே பாய் கதை என்கிறார் ஸ்ரீநிவாசன். மேலும் அவர் கூறியதாவது: சில பேர் தங்களை அழகனாவும், மன்மதனாகவும் நினைத்துக் கொண்டு பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்திவிட வேண்டும் என்று நினைப்பார்கள். முடியாவிட்டாலும் வீழ்த்தி விட்டதாக பெருமையாக சொல்லிக் கொண்டு திரிவார்கள். இப்படிப்பட்ட பிளே பாய் குணம் படைத்த ஒருவன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கிறான். அவனை ஒரு பெண் எப்படி மீட்கிறாள். அதன் பிறகு அவன் பெண்ணின் பெருமையை எப்படி உணர்கிறான் என்கிற கதை.
இதனை விரசம் இல்லாமல் ஜாலியாக எடுத்திருக்கிறோம். இனியா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வாகைசூடவாவுக்கு பிறகு அவருக்கு இந்தப் படம் பெயர் சொல்வதாக அமையும். சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!