பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் |

மலையாளத்தில் கடந்த வருடம் வரை நடிகர் சங்கத்தில் மோகன்லால் தலைமையில் பொறுப்பு வகித்த அணி, ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ராஜினாமா செய்தது. அதனைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் உறுதி கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் அலுவலக மேலாளராக பணிபுரிந்த அதுல்யா என்பவரை சங்கத்தின் பொருளாளர் உன்னி சிவபால் மற்றும் பொதுச்செயலாளர் குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் அவரது பணி திருப்திகரமாக இல்லை எனப் பதவி நீக்கம் செய்ததாக எர்ணாகுளம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் அதுல்யா.
ஸ்வேதா மேனன் பொறுப்பு ஏற்ற பிறகு வரும் முதல் புகார் இது என்பதால், இந்தப் புகாரை விசாரித்த ஸ்வேதா மேனன் மீண்டும் அந்தப் பெண் ஊழியரை நடிகர் சங்கப் பணியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்ல, சங்கத்தின் பொருளாளராக உன்னி சிவபாலை கட்டாய விடுப்பில் செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்கத்தில் பிரச்னை கிளம்பிய அடுத்த நாளே இதற்கான தீர்வை அதிரடியாக எடுத்து அமல்படுத்திய ஸ்வேதா மேனனுக்கு பாராட்டுகள் குவிக்கின்றன.