ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

தெலுங்கானா திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்களாக இருக்கும் பலர் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.
“2008ம் ஆண்டு முதல் சதவீதப் பங்கு அடிப்படையிலான திரையிடலுக்கு முயற்சி செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் அப்படி நடக்கின்றன. ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. இனிமேல் அரசு அனுமதித்தாலும் ஒற்றைத் தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்.
சிங்கிள் தியேட்டர்கள் மூடப்பட்டால் திரையுலகம் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போல சிங்கிள் தியேட்டர்களை டெக்னிக்கலாக மாற்றினால் நிறைய பார்வையாளர்கள் வருவார்கள். அதற்கு சதவீத பங்குதான் சரி,” என்று நிர்வாகிகள் பேசினார்கள்.
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதன் தயாரிப்பாளர்கள் அரசு அனுமதி பெற்று டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவார்கள். அதற்கு இனி அனுமதிக்க மாட்டோம் என இவர்கள் கூறியிருப்பது பெரிய படங்களுக்கும், முன்னணி நடிகர்களுக்கும் மிகவும் சிக்கலாக அமையும்.