லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

கடந்த வருடம் மலையாளத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றார். கடந்த சில வருடங்களாகவே 'மீ டூ' பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய சமயத்தில், அப்போதைய நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில்தான் மறுதேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அப்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான பல நிர்வாகிகள் தோல்வியைத் தழுவினார்கள்; பலர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
தனது தலைமையிலான புதிய நிர்வாகம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இருக்கும் என நம்பிக்கையை அளித்தார் ஸ்வேதா மேனன். இந்த நிலையில் இவரது நிர்வாகத்தில் முதன்முறையாக நடிகர் சங்கத்தில் பணியாற்றி, தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அலுவலக மேலாளரான அதுல்யா என்பவர், சங்கத்தின் பொருளாளர் உன்னி சிவபால் மற்றும் பொதுச்செயலாளர் குக்கு பரமேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக எர்ணாகுளம் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் அவர் கூறும்போது, காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை நேரம் என்றாலும் கூட, நள்ளிரவு வரை வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும்; குறிப்பாகப் பொருளாளர் மாலை 5 மணிக்குமேல் தான் அலுவலகம் வருவதால் அவர் இருக்கும் வரை தாமதமாக இருக்க வேண்டி இருந்தது என்றும், விடுமுறை நாட்களில் கூட வேலை சம்பந்தமாக அழைப்புகள் வந்ததாகவும் அதுல்யா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சங்கத்தில் உள்ள சிலர் ஒரு லட்சம் ரூபாய் தவறாகப் பரிமாற்றம் செய்வதற்கு முயன்றதாகவும், சங்கத்தில் நடக்கும் சில தவறுகளை தட்டிக் கேட்டதற்காகத் தனது வேலை திருப்திகரமாக இல்லை எனக் கூறி ஏப்ரல் 30 அன்று தன்னை பணி நீக்கம் செய்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சங்கத்தின் பொதுச் செயலாளர் குக்கு பரமேஸ்வரன் இது குறித்துக் கூறும்போது, அதுல்யா தற்போது ஒரு பயிற்சிப் பருவத்தில் இருந்த ஊழியர்தான் என்றும், அவரது பணி திருப்திகரமாக இல்லாததால் மட்டுமே அவர் நீக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதுல்யா அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் வடக்கு போலீசார் முதற்கட்ட விசாரணையைத் துவங்கியுள்ளனர்.