லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

'தி ராஜா சாப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ஒரு பக்கம் 'ஸ்பிரிட்', இன்னொரு பக்கம் 'பவுசி' ஆகிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வகையில் இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கத்தில் சமீபத்தில் பவுசி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படக்குழுவினரின் ஒருவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் விசாரணைக்காகவும் தற்காலிகமாக பவுசி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.