பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் |

மலையாளத்தில் கடந்த 45 வருடங்களில் கிட்டத்தட்ட 365 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் மோகன்லால். மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் தனது பங்களிப்பை கொடுத்திருக்கும் மோகன்லால் தற்போதும் தொடர்ந்து ஹீரோவாக பிசியான நடிகராக நடித்து வருகிறார். அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது என்னுடைய சில பழைய படங்களை பார்க்கும் போது இப்போதும் என் கண்கள் கலங்குகிறது என்று கூறியுள்ளார்.
“காரணம் அந்த படங்களில் என்னுடன் நடித்த பலர் இப்போது உயிருடன் இல்லை. அதை பார்க்கும்போது என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.. நானும் ஒருநாள் போகத்தானே போகிறேன். என்னதான் மிகப்பெரிய நடிகர் என்றாலும் கூட, நானும் ஒரு சராசரி மனிதன் தானே” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் மோகன்லால்.