பிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த நடிகை | 20 ஆண்டுகளாக வெற்றிக்கு காத்திருக்கும் பிரஜின் | ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம் | அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர் | சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' | ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின் | 61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார் | பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ் |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஏற்கனவே தனது பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதில் ரத்த வங்கி, கண் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதை மையமாகக் கொண்ட ஒரு புதிய அறக்கட்டளையை தொடங்க இருப்பதாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை செய்து வரும் முயற்சிகள் தனக்கு உத்வேகம் கொடுத்ததாகவும், தானும் சூர்யாவை போலவே இலவச கல்வியை வழங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சியை தெலுங்கு மாநிலங்களுக்கு மட்டுமின்றி தேவைப்படும் எல்லா மாநிலங்களிலும் எதிர்காலத்தில் விரிவுபடுத்தவும் தான் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ள சிரஞ்சீவி, இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடப்போகிறாராம்.




