பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2010-ல் நடித்து வெளியான படம் வருடு. குணசேகர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக பானு ஸ்ரீ மெஹ்ரா என்பவர் நடித்திருந்தார். இவர் டுவிட்டரில் அல்லு அர்ஜுன் பக்கத்தை பின்தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் திடீரென இவரது டுவிட்டர் கணக்கை தன்னை பின் தொடர்வதில் இருந்து பிளாக் செய்தார்.
இதனால் அதிர்ச்சியான பானு ஸ்ரீ இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, “நான் யார் என்று நினைத்து குழம்ப வேண்டாம்.. அல்லு அர்ஜுனுடன் வருடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தேன்.. அதன்பிறகு எனக்கு இப்போதுவரை பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் என்னுடைய போராட்டங்களில் இருந்து நகைச்சுவையாக இருப்பது எப்படி என கற்றுக் கொண்டேன். இதோ இப்போது அல்லு அர்ஜுன் கூட என்னை அவரது டுவிட்டரில் பின்தொடர முடியாமல் பிளாக் செய்துள்ளார்” என்று விரக்தியுடன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அப்படி பிளாக் செய்த மூன்று மணி நேரத்திலேயே மீண்டும் பானு ஸ்ரீ தன்னை பாலோ செய்யும் விதமாக அன்பிளாக் செய்து விட்டார் அல்லு அர்ஜுன். ஆனால் அதற்குள் அவரைப்பற்றி தவறாக பேசி விட்டோமே என உணர்ந்த பானு ஸ்ரீ உடனே மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், “கிரேட் நியூஸ்.. அல்லு அர்ஜுன் என்னை அன் பிளாக் செய்துவிட்டார்.. எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற அர்த்தத்தில் அவரை நான் தவறாக எதுவும் பேசவில்லை. என்னுடைய போராட்டத்தில் இப்போதும் நகைச்சுவைகளை கண்டுகொண்டு இன்னும் முன்னோக்கி செல்லவே முயற்சித்து வருகிறேன். எதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜுனுக்கு நன்றி” என்று கூறி சமாளித்துள்ளார்.