
மறக்க முடியுமா? - சில்லுனு ஒரு காதல்
மார் 12, 2021
Advertisement
படம் : சில்லுனு ஒரு காதல்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம்
இயக்கம் : என்.கிருஷ்ணா
தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன்
சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியான படம், சில்லுனு ஒரு காதல். "ஜில்லுனு" என்ற வார்த்தை வரிவிலக்கிற்காக, "சில்லுனு" என மாறியது. கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த கிருஷ்ணா, இப்படத்தை இயக்கினார்.
ஜோதிகாவும், சூர்யாவும் திருமணத்திற்கு பின் காதலர்கள் போல வாழ்கின்றனர். இந்நிலையில், சூர்யாவின் பழைய டைரியை, ஜோதிகா பார்க்கிறார். அதில், சூர்யாவின் கல்லுாரி கால காதல் கதை இருக்கிறது. இதனால் ஜோதிகா, அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வருவார். அதன்பின் என்ன நடந்தது என்பது தான், படத்தின் கதை.
கல்லுாரி மாணவர், பொறுப்புள்ள குடும்ப தலைவர் என, சூர்யா இரு முகம் காட்டியிருந்தார். கல்லுாரி பருவத்தில் நடக்கும் காதல் கதையில், அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருந்தார், இயக்குனர். படத்தில், சூர்யா - ஜோதிகாவை விட, சூர்யா - பூமிகா ஜோடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர், அசின். கிராமத்திற்கு வடிவேலு, நகரத்திற்கு சந்தானம் என, இரண்டு காமெடி நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர். "என்னம்மா அங்க சத்தம்..." போன்ற காமெடி, இன்றும் "மீம்ஸ்"களாக உலா வருகின்றன.
படத்தின் வெற்றிக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் முக்கிய பங்கு வகித்தது. "முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம் உறங்கும், அவளுக்கென்ன அம்பாசமுத்திர..." பாடல்கள் ரசிக்கச் செய்தன. அந்தோணியின் எடிட்டிங்; ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்தன. இந்த படம், தெலுங்கில் நுவ் நேனு பிரேமா; மராத்தியில், து ஹாய் ரீ என, "ரீமேக்" செய்யப்பட்டது.
படத்தின் தலைப்பு போலவே இருந்தது, சில்லுனு ஒரு காதல்!
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம்
இயக்கம் : என்.கிருஷ்ணா
தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன்
சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியான படம், சில்லுனு ஒரு காதல். "ஜில்லுனு" என்ற வார்த்தை வரிவிலக்கிற்காக, "சில்லுனு" என மாறியது. கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த கிருஷ்ணா, இப்படத்தை இயக்கினார்.
ஜோதிகாவும், சூர்யாவும் திருமணத்திற்கு பின் காதலர்கள் போல வாழ்கின்றனர். இந்நிலையில், சூர்யாவின் பழைய டைரியை, ஜோதிகா பார்க்கிறார். அதில், சூர்யாவின் கல்லுாரி கால காதல் கதை இருக்கிறது. இதனால் ஜோதிகா, அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வருவார். அதன்பின் என்ன நடந்தது என்பது தான், படத்தின் கதை.
கல்லுாரி மாணவர், பொறுப்புள்ள குடும்ப தலைவர் என, சூர்யா இரு முகம் காட்டியிருந்தார். கல்லுாரி பருவத்தில் நடக்கும் காதல் கதையில், அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருந்தார், இயக்குனர். படத்தில், சூர்யா - ஜோதிகாவை விட, சூர்யா - பூமிகா ஜோடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர், அசின். கிராமத்திற்கு வடிவேலு, நகரத்திற்கு சந்தானம் என, இரண்டு காமெடி நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர். "என்னம்மா அங்க சத்தம்..." போன்ற காமெடி, இன்றும் "மீம்ஸ்"களாக உலா வருகின்றன.
படத்தின் வெற்றிக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் முக்கிய பங்கு வகித்தது. "முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம் உறங்கும், அவளுக்கென்ன அம்பாசமுத்திர..." பாடல்கள் ரசிக்கச் செய்தன. அந்தோணியின் எடிட்டிங்; ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்தன. இந்த படம், தெலுங்கில் நுவ் நேனு பிரேமா; மராத்தியில், து ஹாய் ரீ என, "ரீமேக்" செய்யப்பட்டது.
படத்தின் தலைப்பு போலவே இருந்தது, சில்லுனு ஒரு காதல்!
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!