
மறக்க முடியுமா? - காதல்
பிப் 21, 2021
Advertisement
படம் : காதல்
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : பரத், சந்தியா, சுகுமார், தண்டபாணி
இயக்கம் : பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு : எஸ் பிக்சர்ஸ்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் எளிமையான, தரமான படங்களை தயாரிக்க விரும்பி, எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை துவக்கினார். அதன் முதல் படமாக வெளிவந்தது, காதல். ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த நபரின் உண்மைக் கதையை மையமாக வைத்துத் தான், இப்படத்தை பாலாஜி சக்திவேல் உருவாக்கினார்.
ஏழை மெக்கானிக்காக நாயகன், ஜாதி மற்றும் பணபலமிக்க நபரின் மகளாக நாயகி. இருவருக்கும் இடையே காதல் முளைத்து, மதுரையிலிருந்து சென்னை சென்று, திருமணம் செய்துக் கொள்கின்றனர். நாயகியின் உறவினர்கள் சமாதானம் பேசி, காதல் ஜோடியை, மதுரைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு என்ன நிகழ்ந்தது என்பது தான், அதிர்ச்சியூட்டும் க்ளைமேக்ஸ்.
படத்தின் ஒரு பகுதி மதுரை மண்ணும்; மறுபகுதி சென்னை மேன்ஷன் வாழ்க்கையும் என, பிரிக்கப்பட்டிருந்தது. தனுஷ், சாந்தனு ஆகியோர், இக்கதையில் நடிக்க மறுத்தனர்; அதன்பின், பரத் நடித்தார். முருகன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து, ரசிகர்களை உருக செய்தார்.
இப்படத்தில், சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான், முதலில் நாயகியாக நடித்தார். சிறுமியாக இருந்ததால் மாற்றப்பட்டார். இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஷுவா ஸ்ரீதர், கவனிக்க வைத்தார். பாடல்கள், ஹிட் அடித்தன. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதுடன், அதிக வசூலையும் அள்ளி குவித்தது.
தெலுங்கில், பிரேமிஸ்தே என்ற தலைப்பில், "டப்பிங்" செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடத்தில், செல்லுவினா சித்தாரா; பெங்காலியில், சிரோடினி டுமி ஜே அமர்; மராத்தியில், வேத் லவ் ஜீவா; நேபாளியில், மஞ்சரி; பஞ்சாபியில், ரம்ட ஜோகி என்ற தலைப்புகளில், இப்படம், "ரீமேக்" செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் பயணத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது, காதல்!
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : பரத், சந்தியா, சுகுமார், தண்டபாணி
இயக்கம் : பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு : எஸ் பிக்சர்ஸ்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் எளிமையான, தரமான படங்களை தயாரிக்க விரும்பி, எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை துவக்கினார். அதன் முதல் படமாக வெளிவந்தது, காதல். ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த நபரின் உண்மைக் கதையை மையமாக வைத்துத் தான், இப்படத்தை பாலாஜி சக்திவேல் உருவாக்கினார்.
ஏழை மெக்கானிக்காக நாயகன், ஜாதி மற்றும் பணபலமிக்க நபரின் மகளாக நாயகி. இருவருக்கும் இடையே காதல் முளைத்து, மதுரையிலிருந்து சென்னை சென்று, திருமணம் செய்துக் கொள்கின்றனர். நாயகியின் உறவினர்கள் சமாதானம் பேசி, காதல் ஜோடியை, மதுரைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு என்ன நிகழ்ந்தது என்பது தான், அதிர்ச்சியூட்டும் க்ளைமேக்ஸ்.
படத்தின் ஒரு பகுதி மதுரை மண்ணும்; மறுபகுதி சென்னை மேன்ஷன் வாழ்க்கையும் என, பிரிக்கப்பட்டிருந்தது. தனுஷ், சாந்தனு ஆகியோர், இக்கதையில் நடிக்க மறுத்தனர்; அதன்பின், பரத் நடித்தார். முருகன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து, ரசிகர்களை உருக செய்தார்.
இப்படத்தில், சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான், முதலில் நாயகியாக நடித்தார். சிறுமியாக இருந்ததால் மாற்றப்பட்டார். இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஷுவா ஸ்ரீதர், கவனிக்க வைத்தார். பாடல்கள், ஹிட் அடித்தன. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதுடன், அதிக வசூலையும் அள்ளி குவித்தது.
தெலுங்கில், பிரேமிஸ்தே என்ற தலைப்பில், "டப்பிங்" செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடத்தில், செல்லுவினா சித்தாரா; பெங்காலியில், சிரோடினி டுமி ஜே அமர்; மராத்தியில், வேத் லவ் ஜீவா; நேபாளியில், மஞ்சரி; பஞ்சாபியில், ரம்ட ஜோகி என்ற தலைப்புகளில், இப்படம், "ரீமேக்" செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் பயணத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது, காதல்!
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!