
சீரியல் தொடங்கும் முன்பே விலகிய ரவீனா தாஹா
ஜன 07, 2025
Advertisement
பிரபல சின்னத்திரை நடிகையான ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமான அவர் மெளன ராகம் 2 தொடரில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் படுபயங்கர கிளாமரில் அசத்தி ரசிகர்களையும் கவர்ந்தார். பிக்பாஸ், குக் வித் மோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில், சிந்து பைரவி என்கிற புதிய தொடரில் ரவீனா தாஹா இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பதாக இருந்தது. இதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அந்த தொடரிலிருந்து ரவீனா தாஹா வெளியேறி இருக்கிறார். அவர் வெளியேறியதற்கான காரணம் தெரியாத நிலையில் ரவீனாவிற்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் கமிட்டாகியிருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
இந்நிலையில், சிந்து பைரவி என்கிற புதிய தொடரில் ரவீனா தாஹா இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பதாக இருந்தது. இதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அந்த தொடரிலிருந்து ரவீனா தாஹா வெளியேறி இருக்கிறார். அவர் வெளியேறியதற்கான காரணம் தெரியாத நிலையில் ரவீனாவிற்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் கமிட்டாகியிருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!