
நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு
டிச 13, 2024
Advertisement
சின்னத்திரை நடிகரான நேத்ரன் 25 வருடங்களாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவரது மனைவி தீபாவும் பிரபல சின்னத்திரை நடிகை தான். இவரது மூத்த மகள் அபிநயாவும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துவிட்டார். இப்படி எல்லாமே பாசிட்டிவாக சென்று கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத வகையில் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இதனைதொடர்ந்து பல செலிபிரேட்டிகள் நேத்ரனின் நல்ல குணத்தை கூறி அவருக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நேத்ரனின் மகள் நேத்ரனின் இளவயது புகைப்படங்களை வெளியிட்டிருந்ததை பார்த்து தமிழ் சினிமா ஒரு நல்ல ஹீரோவை இழந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேத்ரனின் மனைவி தீபாவும் தனது கணவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் எமோஷனலாகி தீபாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!