
கொள்கை மீறி தாலிக்கட்டியது ஏன்? - விக்ரமன் விளக்கம்
இந்நிலையில் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை விக்ரமன் ஹிந்து திருமண முறைப்படி தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஈவெரா, அம்பேத்கர் என பேசி ஹிந்து சடங்கு சம்பிரதாயங்களை கிண்டலடித்துவிட்டு தன் வீட்டு திருமணத்தில் மட்டும் சமூகநீதி போராளிகள் தாலிக்கட்டி கொள்கிறார்கள்" என விமர்சனம் எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள விக்ரமன், "இது என் மனைவியின் ஆசை. கூட இருப்பவர்களுக்காக சில விஷயங்களை நாம் மதிக்க வேண்டும். அது தான் பகுத்தறிவு" என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து "ஊரான் வீட்டுக்கு மட்டும் உபதேசம் செய்வது தான் பகுத்தறிவா?" என அதையும் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!