
குழந்தைகள் பிறந்த பிறகு மிகவும் கஷ்டம் : பிரஜன் உருக்கம்
மார் 21, 2024
Advertisement
சின்னத்திரை தம்பதிகளான பிரஜன் - சாண்ட்ரா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது பிரஜன் மட்டும் ஆக்டிவாக சினிமாக்களில் நடித்து வருகிறார். சாண்ட்ரா பொறுப்பான குடும்ப தலைவியாக குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இருவரும் ஜோடியாக பேட்டி அளித்துள்ளனர்.
அதில், "நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தான் அரிசி மூட்டை எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பின் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தோம். யாருமே உதவி செய்யவில்லை. பிரஜன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொள்வார். எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமான காலத்தை கடந்து வந்தோம்" என கூறியுள்ளனர்.
அதில், "நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தான் அரிசி மூட்டை எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பின் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தோம். யாருமே உதவி செய்யவில்லை. பிரஜன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொள்வார். எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமான காலத்தை கடந்து வந்தோம்" என கூறியுள்ளனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!