
சீரியல் நடிகைகளை திருமணம் செய்யாதீர்கள் : அட்வைஸ் மழை பொழிந்த மிர்ச்சி செந்தில்
இதுகுறித்து மிர்ச்சி செந்தில் கூறியதிலிருந்து, "பொதுவாக சீரியலில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் போலத்தான் நிஜ கேரக்டரும் இருக்குமென நடிப்பவர்களும் நினைத்து விடுகிறார்கள். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்கள் சுயரூபம் தெரியவர பிரச்னை ஆரம்பமாகிறது. இதனால் தான் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் டைவர்ஸ் செய்துவிடுகிறார்கள்.
நானும் கூட அப்படித்தான் ஸ்ரீஜாவை சீரியலில் வரும் மீனாட்சியாக பார்த்துவிட்டேன். பின்பு தான் புரிந்தது நான் மீனாட்சியை கல்யாணம் பண்ணல ஸ்ரீஜாவை கல்யாணம் பண்ணியிருக்கிறேன் என்று. சீரியல் ஸ்ரீஜா வேறு, நிஜ ஸ்ரீஜா வேறு. திருமணத்துக்கு பிறகு வேறுவிதமாக வாழ்க்கை அமைந்தாலும் காதலின் மகத்துவம் புரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்" என்று அட்வைஸ் செய்வது போல் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!