
7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு
தொலைக்காட்சியில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அதர்வா, பிபிசியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்படுகிறார். தனது கல்வி ஆவணங்கள் பொய்யானவை என்பதை அறிந்த அதர்வா அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
2016ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நாளை (29ம் தேதி) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து இயக்குனர் சந்தோஷ் கூறும்போது “படம் வெளியானபோது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைக்கதையில் இதுபோன்ற இருண்ட உண்மைகளை மக்களுக்கு மத்தியில் வெளிக்கொணர்வது சவாலானது ஆகும். சில சுவாரஸ்யமான துப்புகளுக்கு வழிவகுக்கும் எலியும் பூனையுமாக துரத்தி கொண்டு செல்வது பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!