
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரி குறித்து அப்டேட் வெளியிட்ட பாவம் கணேசன் சீரியல் நடிகை!
இந்நிலையில், "பாவம் கணேசன்" விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நடிகை நேஹா கவுடா பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகப் போகும் தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் நேஹா கவுடாவும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "பல அழகான நினைவுகளை பிக்பாஸ் வீட்டுக்குள் சேகரிக்க போகிறேன். திரித்து பேசும் வழக்கம் எனக்கு கிடையாது. அநாவசியமாக யாரிடமும் பேசமாட்டேன்" என கூறியுள்ளார்.
வைரலாகி வரும் அந்த வீடியோ பார்க்கும் ரசிகர்கள் தமிழ் பிக்பாஸ் 6வது சீசனுக்கான உத்தேச பட்டியலில் கூட நேஹா கவுடா பெயர் இல்லையே! எனவே, அவர் கலந்துகொள்ளப்போவது உண்மையா? பொய்யா? என குழம்பி போயுள்ளனர். நேஹா கவுடா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது உண்மை தான். ஆனால், அவர் தமிழ் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கவில்லை, கன்னடத்தில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 9-ல் தான் அவர் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!