பாலாவின் நெகிழ்ச்சியான செயல் : உதவிக்கரம் நீட்டிய பிரபலங்கள்
Advertisement
Advertisement
பாலாவின் நெகிழ்ச்சியான செயல் : உதவிக்கரம் நீட்டிய பிரபலங்கள்
ஜூலை 26, 2022
அ நிறம் | அளவு
Advertisement
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் காமெடி கலக்கல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 அண்மையில் முடிவுக்கு வந்தது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்ல, தர்ஷன் மற்றும் அபிராமி ரன்னர்-அப் பட்டத்தை பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது ஜெயித்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில பிரபலங்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த வகையில் கோமாளியாக அசத்திய புகழுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினர். அதை வாங்கிய புகழ், "நான் எப்போதாவது தான் நிகழ்ச்சிக்கு வருகிறேன். எனவே இந்த தொகையை பாலாவுக்கு கொடுக்கிறேன்" என விட்டுக்கொடுத்தார். ஏழைக்குழந்தைகளின் கல்வி செலவுக்காக உதவி வரும் பாலா, அந்த பணத்தை குழந்தைகளுக்காக தரப்போவதாக அறிவித்தார். உடனேயே ஸ்ருதிகா தனது 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையிலிருந்து 1 லட்ச ரூபாயை பாலாவுக்கு தருகிறேன் என்றார். புகழ் மற்றும் ஸ்ருதிகா வழங்கிய பணத்துடன் தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த 1 லட்ச ரூபாய் பணத்தையும் பாலா பெரம்பூரில் இருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்பிற்காக வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார். குக் வித் கோமாளி சீசன் 3 ஃபைனலில் வெற்றி பெற்றது ஸ்ருதிகாவாக இருந்தாலும் பாலா நேயர்கள் அனைவரது மனதையும் கவர்ந்து நல்லதொரு இடத்தை பிடித்துவிட்டார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!