சீரியல்களில் அதிகமாக தோன்றும் நடிகர் மானஸ் சாவலி. ராதிகாவின் வாணி ராணி தொடரில் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிகர் என பெயர் பெற்றுள்ளார். அவர் தற்போது "கண்ணான கண்ணே" தொடரிலும் வில்லன் கதாபாத்திரத்தி தான் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றான "ரஜினி" தொடரில் இணைந்துள்ளார். ஸ்ரேயா அஞ்சன் கதாநாயகியாக நடிக்கும் ரஜினி தொடர் கிட்டத்தட்ட "கயல்" தொடரை போல் உள்ளது. சின்னத்திரையின் பிரபல வில்லன் நடிகரான மானஸ் சாவலியும் இந்த தொடரில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!