
ஆர்மியில் சேர போராடிய பிக்பாஸ் அமீர்
அமீர் தனது 16 வயதிற்குள்ளாகவே தாய் - தந்தையரை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை அஷ்ரப் என்பவர் தான் பொறுப்புடன் வளர்த்தார். சிறுவயதில் ஆர்மியில் சேர வேண்டும் என விருப்பம் கொண்ட அமீர் அதற்காக எவ்வளவோ முயற்சி செய்து பாதுகாப்புத் துறைக்கு படித்தார். ஆனால், அவரால் ஆர்மியில் தேர்வு பெற முடியவில்லை. நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாகத்தான் தேசியக் கொடியை அவரது கைகளில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
ஆர்மியை தவிர டான்ஸிலும் அதிக ஈடுபாடு கொண்ட அமீர், பிரபுதேவாவின் தீவிர ரசிகர். அதன்பின் நடனம் கற்றுக்கொண்ட அமீர் இன்று ஏடிஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக்குழுவை ஆரம்பித்துள்ளார். அந்த குழு இந்திய அளவில் பல நடன போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
பிக்பாஸில் அமீர் செய்யும் சேட்டைகள் சிலரை கடுப்பேற்றியும் சிலரை கவர்ந்தும் வருகிறது. ஆனால், அவருடைய வாழ்க்கை கதை பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!