
புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர்
ஜூலை 05, 2022
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "செம்பருத்தி" தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே கதிர். தொடர்ந்து அதே சேனலில் பல ஹிட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வரும் "கன்னத்தில் முத்தமிட்டால்" என்கிற தொடரில் வீஜே கதிர் எண்ட்ரி கொடுத்துள்ளார். ஹீரோயினை பெண் பார்க்கும் மாப்பிள்ளையாக கதிர் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் சீரியல் முழுக்க பயணிக்குமா? அல்லது கெஸ்ட் ரோல் மட்டும் தானா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. எனினும், செம்பருத்தி தொடரில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நீண்ட நாள் கழித்து புதிய சீரியலில் வீஜே கதிர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல மேலும் பல சீரியல்களில் வீஜே கதிர் நடிக்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!