
ராமமூர்த்தி கதாபாத்திரம் சாக காரணம் இதுதான் - ரோசரி ஓப்பன் டாக்
செப் 02, 2024
பாக்கியலெட்சுமி தொடரில் தாத்தா ராமமூர்த்தியாக ரோசரி நடித்து வருகிறார். தற்போது இவரது கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது. ஏன் ராமமூர்த்தியை கொன்றுவிட்டார்கள் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோசரியே பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் தான். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரமும் முடிவு பெறுகிறது. அதனால் ஓகே என்று சொல்லிவிட்டேன். இறுதிசடங்கு காட்சிக்காக இறுதிசடங்கை ரியலா பண்ணனும் சொன்னாங்க. ராமமூர்த்திக்கு இறுதிசடங்கு பண்றாங்கன்னு எடுத்துக்கிட்டேன். அது நடிப்பு அவ்ளோ தான்" என்று கூறியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!