
தெறி பேபி - புதிய நிகழ்ச்சி : வீஜேவாக ரக்க்ஷன் - மணிமேகலை
ஜூலை 23, 2021
Advertisement
விஜய் டிவியில் குழந்தைகளுக்கான புதிய ரியாலிட்டி ஷோவாக தெறி பேபி ஒளிப்பரப்பாக உள்ளது. இதை வீஜே ரக்ஷ்னுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு அடுத்தபடியாக ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதிலும் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு அதை தொகுத்து வழங்கும் வீஜேக்களின் பங்கு முக்கியமானது. சிவ கார்த்திகேயன், டிடி, தீபக், ரம்யா தொடங்கி பலர் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
அந்த வகையில் திருமணத்துக்கு பின் வீஜே வேலைக்கு ஓய்வு கொடுத்த மணிமேகலை, மீண்டும் வீஜே ஆகுமாறு அவர்கள் ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அவரும் மீண்டும் வீஜே ஆகும் விருப்பத்தையும், ரக்ஷனுடன் இணைந்து பணிபுரியும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது விருப்பத்திற்கு செவி சாய்த்துள்ள டிவி நிர்வாகம் இந்த கலாட்டாவான காம்போவினை குழந்தைகள் ஷோவில் களமிறக்கியுள்ளது. குழந்தைகளின் சுட்டித் தனத்துடன் தெறிக்க விட வருகிறது இந்த புதிய காம்போ.
ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு அதை தொகுத்து வழங்கும் வீஜேக்களின் பங்கு முக்கியமானது. சிவ கார்த்திகேயன், டிடி, தீபக், ரம்யா தொடங்கி பலர் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
அந்த வகையில் திருமணத்துக்கு பின் வீஜே வேலைக்கு ஓய்வு கொடுத்த மணிமேகலை, மீண்டும் வீஜே ஆகுமாறு அவர்கள் ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அவரும் மீண்டும் வீஜே ஆகும் விருப்பத்தையும், ரக்ஷனுடன் இணைந்து பணிபுரியும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது விருப்பத்திற்கு செவி சாய்த்துள்ள டிவி நிர்வாகம் இந்த கலாட்டாவான காம்போவினை குழந்தைகள் ஷோவில் களமிறக்கியுள்ளது. குழந்தைகளின் சுட்டித் தனத்துடன் தெறிக்க விட வருகிறது இந்த புதிய காம்போ.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!