
சைலண்ட்டாக திருமணத்தை முடித்த ‛செவ்வந்தி சீரியல் நடிகை
செப் 23, 2023
Advertisement
செவ்வந்தி தொடரில் அர்ச்சனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கவுடா நடித்து வந்தார். ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் செவ்வந்தி தொடரிலிருந்து ரம்யா கவுடா விலகிவிட, அதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் காதலர் பார்கவை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய ரம்யா கவுடா, தற்போது அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரம்யா கவுடாவுக்கும், பார்கவுக்கும் சக நடிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!