
ரசிகர்களை ஏங்க வைக்கும் ப்ரீத்தி சர்மா
ஜூன் 24, 2022
Advertisement
"சித்தி 2" தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் ப்ரீத்தி சர்மா. லக்னோவை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் படிப்பை 10-ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான ப்ரீத்தி ஷர்மா, டிக் டாக், ரிலீஸ் வீடியோக்கள் மூலம் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். சித்தி 2 சீரியல் திடீரென முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் வேறெந்த ப்ராஜெக்டிலும் ப்ரீத்தி நடிக்கவில்லை. தெலுங்கில் ஒளிபரப்பாகும் காவ்யாஞ்சலி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை தமிழ் ரசிகர்கள் ஆசையோடு பார்த்து காதலித்து வருகின்றனர். சீக்கிரம் தமிழில் நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!