
சுந்தரி சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் கவுசல்யா
பிப் 23, 2024
Advertisement
‛சுந்தரி" தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து, அந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்னு மேனன், கிருஷ்ணன் ரகுநந்தன் ஆகியோருடன் முதல் சீசனில் நடித்த பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் மூத்த நடிகையான வடிவுக்கரசி வில்லி கதாபாத்திரத்தில் என்ட்ரியானதை தொடர்ந்து கதை விறுவிறுப்படைந்துள்ளது. இதில் மேலும் சுவாரசியத்தை சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகை கவுசல்யாவை மீண்டும் நடிக்க வைத்து வருகின்றனர். கவுசல்யா ஏற்கனவே சீசன் 1-ல் நந்தன் பாரதி என்கிற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது இந்த நந்தன் பாரதி கதாபாத்திரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!