
வசந்த் வசியை வஞ்சிக்கிறதா சின்னத்திரை?
காரணம் இவர் ஹீரோவாக நடித்த சீரியல்களின் புரோமோக்கள் மற்றும் போஸ்டர்களில் இவரது முகத்தை காண்பிக்கவே மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரிலிருந்து வசந்த் வசி வெளியேறினார். ஆனால், அதன் பிறகு நடித்த ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலும் இவர் நடித்த பிரசாத் கதாபாத்திரத்திற்கு இவர் வெளியேறிய பின் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விலும் வசந்த் வசி தற்போது விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக மீண்டும் வெங்கட் ரங்கநாதன் எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதையிலும் வெங்கட் எண்ட்ரிக்கு பிறகு தான் செந்தில் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரசிகர்கள் சிலர் வசந்த் வசியை சின்னத்திரை வஞ்சிப்பதாக புகார் கூறி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!