
தெலுங்கு சீரியலில் நடிக்கும் பாத்திமா பாபு
ஜன 31, 2024
Advertisement
செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முகமாக வலம் வருகிறார். சின்னத்திரைக்கு முன்பாக ஏராளமான படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாத்திமா பாபு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்து அசத்தினார். அதன்பின் சீரியலில் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாத்திமா பாபு, "இன்று - புதிய தெலுங்கு சீரியலில் முதல் நாள்" என்று தனது புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் பாத்திமா பாபுவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!