
எங்க வீட்டு மீனாட்சி புதிய தொடர்: 18ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
அக் 15, 2021
Advertisement
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் எங்க வீட்டு மீனாட்சி. இதில் பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது காரைக்குடி செட்டிநாட்டு கூட்டு குடும்பத்தின் கதை. இந்த குடும்பத்தின் தலைவியாக வள்ளியம்மாள் என்ற கேரக்டரில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். மீனாட்சி என்கிற டைட்டில் கேரக்டரில் நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். அவரது ஜோடியாக சிதம்பரம் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் நடிப்பது குறித்து பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது: முதல் முறையாக கலர்ஸ் தமிழோடு இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது நடிப்பை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பதோடு எங்களுடன் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். என்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் நடிப்பது குறித்து பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது: முதல் முறையாக கலர்ஸ் தமிழோடு இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது நடிப்பை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பதோடு எங்களுடன் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். என்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!