
இந்து, கிறிஸ்துவ முறைப்படி பிரிட்டோ மனோ- சந்தியா திருமணம்
ஜூலை 11, 2023
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்து வந்த சந்தியா மற்றும் ப்ரிட்டோ மனோ இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன் தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு இருவருமே விலகிவிட்டனர். இதற்கான காரணம் என்ன? என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், நேற்றைய தினம் இருவருக்கும் திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணமானது இந்து, கிறிஸ்துவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சந்தியா - ப்ரிட்டோ மனோவுக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!