
விக்ரமனின் அம்பேத்கர் கன்டன்டை கட் செய்த பிக்பாஸ்! கடுப்பான நெட்டிசன்கள்
இது ஓடிடியில் 24 மணி நேர ஒளிபரப்பில் மட்டுமே காண்பிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. அதேபோல் மற்றொரு டாஸ்க்கில், விக்ரமன் அம்பேத்கருக்கு, "ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாட்டின் நிலையை தலைநிமிர செய்தவர் நீங்கள்" என கடிதம் எழுதுகிறார். இதுவும் ஓடிடியின் 24/7 ஸ்ட்ரீமிங்கில் சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பானது. சமூக கருத்து என்ற டாஸ்க்கில் மிக முக்கியமான இந்த இரண்டு காட்சிகளும் தொலைக்காட்சியில் மட்டும் ஏன் கட் செய்யப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அசீம் போன்ற பண்பற்ற போட்டியாளர்களை சேவ் செய்யும் பிக்பாஸ் விக்ரமன் போன்றோரிடம் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறார் எனவும் பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!