
தீபிகா படுகோனேவுக்கே டூப் போட்ட பச்சக்கிளி சீரியல் நடிகை?
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்துள்ள அஞ்சலி ராவ், தென்னிந்திய சின்னத்திரை நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த அஞ்சலி ராவ் தான் "கோச்சடையான்" படத்தில் தீபிகா படுகோனேவுக்காக டூப் போட்டுள்ளார்.
மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவான அந்த அனிமேஷன் படத்தில் தீபிகா படுகோனேவின் முகபாவங்களுக்காக அஞ்சலி ராவ் தான் டூப் போட்டு நடித்துக்கொடுத்துள்ளார். சமீபத்தில் கலர்ஸ் டிவியின் "பச்சக்கிளி" தொடரின் மூலம் அஞ்சலி ராவ் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இந்த தகவலானது தற்போது மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!