
தீபிகா படுகோனேவுக்கே டூப் போட்ட பச்சக்கிளி சீரியல் நடிகை?
நவ 03, 2022
Advertisement
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தனது திறமையான நடிப்பால் எட்டமுடியாத உயரத்தை தொட்டு புகழ் உச்சியில் இருக்கிறார். ஆனால், அவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை தான் ஒரு படத்தில் டூப் போட்டுள்ளார். "சூது கவ்வும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலில் ராவ், தொடர்ந்து பல தமிழ் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். அவ்வப்போது வெள்ளித்திரை கைக்கொடுக்காமல் போனால் சின்னத்திரை பக்கம் வந்துவிடுவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்துள்ள அஞ்சலி ராவ், தென்னிந்திய சின்னத்திரை நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த அஞ்சலி ராவ் தான் "கோச்சடையான்" படத்தில் தீபிகா படுகோனேவுக்காக டூப் போட்டுள்ளார்.
மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவான அந்த அனிமேஷன் படத்தில் தீபிகா படுகோனேவின் முகபாவங்களுக்காக அஞ்சலி ராவ் தான் டூப் போட்டு நடித்துக்கொடுத்துள்ளார். சமீபத்தில் கலர்ஸ் டிவியின் "பச்சக்கிளி" தொடரின் மூலம் அஞ்சலி ராவ் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இந்த தகவலானது தற்போது மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்துள்ள அஞ்சலி ராவ், தென்னிந்திய சின்னத்திரை நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த அஞ்சலி ராவ் தான் "கோச்சடையான்" படத்தில் தீபிகா படுகோனேவுக்காக டூப் போட்டுள்ளார்.
மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவான அந்த அனிமேஷன் படத்தில் தீபிகா படுகோனேவின் முகபாவங்களுக்காக அஞ்சலி ராவ் தான் டூப் போட்டு நடித்துக்கொடுத்துள்ளார். சமீபத்தில் கலர்ஸ் டிவியின் "பச்சக்கிளி" தொடரின் மூலம் அஞ்சலி ராவ் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இந்த தகவலானது தற்போது மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!