
மீண்டும் தொடங்கிய அனாமிகா படப்பிடிப்பு
பிப் 21, 2024
Advertisement
சின்னத்திரையில் ஒரு காலத்தில் ஹாரர் தொடருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இடையில் சிறிது காலம் ஹாரர் தொடருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஹிந்தி சீரியல்களின் டப்பிங் வருகை மீண்டும் அந்த மார்க்கெட்டை தமிழ் சின்னத்திரையில் உருவாக்கியது. இதனை தொடர்ந்து நந்தினி, அருந்ததி போன்ற தொடர்கள் வெளியாகி வெற்றியடைந்த பின், சமீபத்தில் அனாமிகா என்கிற புத்தம் புதிய ஹாரர் தொடர் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், |தொடர்ந்து எந்த அப்டேட்டும் வராததால் அந்த சீரியல் டிராப் செய்யப்பட்டதாக பலரும் நினைத்தனர்.
இந்நிலையில், தற்போது அனாமிகா தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தொடரில் அக்ஷதா தேஷ்பாண்டே என்கிற புது நடிகை அறிமுகமாகிறார். மேலும், ஆனந்தி சீரியலில் நடித்து வரும் தர்ஷக் கவுடா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது அனாமிகா தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தொடரில் அக்ஷதா தேஷ்பாண்டே என்கிற புது நடிகை அறிமுகமாகிறார். மேலும், ஆனந்தி சீரியலில் நடித்து வரும் தர்ஷக் கவுடா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திங்களில் நடிக்கின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!