
மூன்றாவது முறையாக நடிகை மாற்றம்
மே 20, 2022
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் "நினைத்தாலே இனிக்கும்" டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வருகிறது. இந்த தொடரில் தர்ஷினி என்ற கதாபாத்திரத்திற்கு இதுவரை மூன்று நடிகர்கள் மாறிவிட்டனர். சீரியலின் தொடக்கத்தில் தர்ஷினி கதாபாத்திரத்தில் முதலில் தீப்தி ராஜேந்திரன் என்ற நடிகை நடித்து வந்தார். ஆனால், அவர் திடீரென விலகிவிட்ட நிலையில் ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீநிதி நடிக்க ஆரம்பித்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அவரும் மாற்றப்பட்டு புதிதாக தாட்சாயினி என்ற நடிகையை நடிக்க வைத்துள்ளனர். இவர் ஜீ தமிழில் ஏற்கனவே ஒளிபரப்பான "என்றென்றும் புன்னகை", "சூர்யவம்சம்" ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!