
மோகன்லாலின் டுவல்த் மேன் படப்பிடிப்பு நிறைவு - ஓடிடிக்கு பேச்சுவார்த்தை
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 15 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் கலந்துகொண்டு நடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இந்த படம் ஆறு ஆண் கதாபாத்திரங்கள் 6 பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஒரே நாளில் நடைபெறும் கதையாக த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இதனிடையே இந்த படமும் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதே பிரபல நிறுவனம் ஒன்றும் அதற்கான பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!