
ஹேக்கான இன்ஸ்டாகிராம் ; மன்னிப்பு கேட்ட நமீதா
செப் 15, 2021
Advertisement
பொதுவாக சினிமா பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகள் அவ்வபோது ஹேக்கர்ஸ் மூலமாக முடக்கப்படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட சந்தானத்துடன் ஜோடியாக நடித்த நடிகை ஆஷ்னா ஜவேரியின் பேஸ்புக் கணக்கு கூட ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டதாக கூறி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது மலையாள நடிகை நமீதா பிரமோத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டது. அதே சமயம் அதிர்ஷ்டவசமாக சில மணி நேரங்களிலேயே அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
இது குறித்து கூறியுள்ள நமீதா பிரமோத், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தேவையற்ற செய்திகள் காணப்படுவதாக எனது தோழிகள் பலர் கூறினார்கள். அதன்பிறகு தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதை நான் அறிந்தேன். இதனால் மற்றவர்களுக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், என்று கூரியுள்ளார் நமீதா பிரமோத்.
இது குறித்து கூறியுள்ள நமீதா பிரமோத், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தேவையற்ற செய்திகள் காணப்படுவதாக எனது தோழிகள் பலர் கூறினார்கள். அதன்பிறகு தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதை நான் அறிந்தேன். இதனால் மற்றவர்களுக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், என்று கூரியுள்ளார் நமீதா பிரமோத்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!