
வாரியம் குன்னன் படத்திலிருந்து பிரித்விராஜ் விலகல்
அந்த மாவீரனின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக 2021ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருந்தார்கள்.. ஆனால் தற்போது இந்தப்படத்தில் இருந்து நடிகர் பிரித்விராஜ் மட்டுமல்ல, இயக்குனர் ஆசிக் அபுவும் சேர்ந்து விலகியுள்ளார்களாம்.. தயாரிப்பாளர் தரப்பு சொன்னபடி இந்தப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை எனவும், இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல திசைகளில் இருந்து எழுந்த பிரச்சனைகளை பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றும் காரணம் சொல்லப்படுகிறது..
அதனால் தான் பிரித்விராஜும் ஆசிக் அபுவும் இந்தப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இப்ராஹீம் வெங்கரா, அலி அக்பர் மற்றும் பி.டி.குஞ்சு முஹம்மது என்கிற மூன்று பேர் தாங்களும் இதே வாரியம்குன்னன் கதையை படமாக்கும் முயற்சியில் இருப்பதாக போட்டியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!