
பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் : தெலுங்கு சினிமாவில் எழுந்த சர்ச்சை
இந்த நேரத்தில் பிரகாஷ்ராஜை கன்னடர் என்றொரு விசயத்தை முன்வைத்து எதிரணியினர் பிரச்சாரம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான பாண்ட்லா பிரகாஷ் என்பவர் குரல் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பிரகாஷ்ராஜ் தெலுங்கர் அல்ல, கன்னடர் தான். ஆனால், ஐதராபாத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை
தத்தெடுத்துள்ளார். அந்த மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வளர்ச்சிப் பணிகளை ஆற்றி வருகிறார். அந்த அளவுக்கு தெலுங்கு மக்களுக்காக அவர் சேவை செய்கிறார். அப்படிப்பட்ட அவரை வெளி மாநிலத்தவர் என்று பிரித்துப்பேசுவது தவறு என்று பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதோடு, ராஜமவுலி, பிரபாஸ் போன்றவர்கள் எல்லாம் இன்றைக்கு தேசிய அளவில் பிரபலமாகி விட்டனர். அவர்களையெல்லாம் மற்ற மொழியினர் புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? கலைஞர்களை மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!