
இந்த வருடமும் அதே சிக்கலை மீண்டும் சந்திக்குமா மலையாள பிக்பாஸ்?
கடந்த வருடமும் இதேபோன்ற ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், கடந்த மார்ச் 20ஆம் தேதி 76வது எபிசோட் வரை ஒளிபரப்பான நிலையில், இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த மூன்றாவது சீசனும் 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அதேபோன்ற சங்கடத்தை இந்தமுறையும் சந்திக்க நேரிடலாம் என்றே தெரிகிறது.
குறிப்பாக மே முதல் வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஆச்சர்யமாக கடந்த முறை போல இந்தமுறையும் அதே 76 நாட்களுடன் இந்த நிகழ்ச்சி இடையில் நிறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது என்பது உண்மை தான்... ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக வெளியிலிருந்து வந்து செல்லும் பணியாளர்கள், ஊரடங்கு சமயத்தில், பிக்பாஸ் பணிகளுக்காக ஸ்டுடியோ வந்து செல்ல முடியாது என்பதால் தான், கடந்தமுறை பாதியிலேயே நிறுத்தப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறையும் அதே சோகம் தொடருமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!