
தெலுங்கில் ரத்தாகும் படப்பிடிப்புகள்
தெலுங்குத் திரையுலகத்தில் சில பிரபலங்கள் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதன் காரணமாக சில சினிமா படங்களின் படப்பிடிப்புக்களை அக்குழுவினர் ரத்து செய்துள்ளார்கள்.
சில பெரிய படங்களின் படப்பிடிப்பு மட்டும் தற்போது நடந்து வருகிறதாம். அவையும் அடுத்த சில நாட்களில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் சின்னத் திரைத் தொடர்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். அதன் காரணமாக டிவிக்களில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களுக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் கொரோனா தாக்கிய போதே எழுந்து கொள்ள முடியாத திரையுலகம் இந்த வருடத்தில் கொஞ்சம் மீள ஆரம்பித்தது. இப்போது மீண்டும் தாக்கம் என்பதால் அடுத்த மீள்வுக்கு இன்னும் பல மாத காலம் ஆகலாம் என வருத்தத்துடன் சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!