
உப்பெனா - வியக்க வைத்த ஓடிடி உரிமை விலை
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு எப்படி வருவார்கள் என்ற சந்தேகத்தை இப்படம் போக்கியிருக்கிறது. இதுவரையிலும் 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் பங்குத் தொகையாக கொடுத்துவிட்டது என படத்தை வாங்கியவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அடுத்து ஓடிடியில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் மிக அதிக விலைக்குக் கேட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறதாம். சுமார் 7 கோடி வரை தரத் தயாராக இருக்கிறார்களாம். அறிமுக நடிகர்களின் படத்திற்கு இந்த அளவிற்கு விலை என்பது பெரிய தொகை.
இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒடிடியில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!