
பாஸ் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் மனு
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கன்னட திரை உலகின் பிரபல நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக தனது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட பலருடன் தற்போது சிறையில் இருக்கிறார். இதை மையப்படுத்தி தற்போது பாஸ் என்கிற திரைப்படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், தற்போது இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் நிலையில் இந்த சம்பவங்கள் மையப்படுத்தி படம் இருப்பது மற்றும் தன்னை போன்ற நபரை கழுத்தில் சித்தரிப்பது போன்ற காட்சிகள் தங்களது சட்ட போராட்டத்தை பாதிக்கும் என்று கூறி தனது மனைவி விஜயலட்சுமியுடன் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜூன் 19 (நாளை) இந்த பாஸ் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தர்ஷனின் இந்த புதிய மேல்முறையீட்டு மனுவால் மீண்டும் தள்ளிப்போகுமா அல்லது திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற பரபரப்பும் எதிர்பார்ப்பும் கன்னட திரை உலகில் எழுந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!