
திரிஷ்யம் 3 ஓடிடி உரிமை பிரச்சினை : டில்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆனால் தற்போது ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வேறு சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று கூறியுள்ள அமேசான் நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் திரிஷ்யம்-3க்கான தங்களது ஓடிடி உரிமையை மூன்றாவது ஒரு நபருக்கு விற்கக் கூடாது என்று தடை விதிக்கும்படி வழக்கு தொடுத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்த விசாரணைகள் முடியும் வரை திரிஷ்யம்-3 ஓடிடி உரிமையை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என்று ஒரு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே 15ம் தேதி நடைபெற இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!