
5 மணிநேரம் ரசிகர்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்த மம்முட்டி
நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள போல்ட் காட்டி பேலஸில் இந்த ரசிகர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மம்முட்டி செய்து இருந்தார். இதில் இளைஞர்கள், வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் என மம்முட்டியின் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பத்தினம் திட்டா, எர்ணாகுளம் திருச்சூர், ஆலப்புழா, கோழிக்கோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று மம்முட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மம்முட்டியும் எந்தவித சோர்வும் அசவுகரியமும் இன்றி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தார். இது குறித்த புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!