
மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர்
இதில் அவர் கூறும்போது, “எனக்கு நேற்று ரொம்பவே பிஸியான நாளாக இருந்தது. சென்சார் அதிகாரிகளுடன் மீட்டிங், பெத்தம்மா கோவிலுக்கு சென்று வந்தது, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை கவனித்தது, பாடல் புரோமோவின் இறுதிக்கட்ட செக்கிங் என தொடர்ந்து வேலைகள் அதிகம் இருந்தது. இந்த சமயத்தில் நான் எக்ஸ் பக்கத்தில் வெளியான ஒரு பதிவு ஒன்றை பாதி மட்டுமே படித்துவிட்டு அது குறித்து என்னுடைய கருத்தை தெரிவித்தேன். இதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை.
ஆனால் சில நிமிடங்களிலேயே என்னுடைய குழுவினர் அதை முழுவதுமாக நீங்கள் படித்துப் பாருங்கள் என்று கூறி என்னை அலர்ட் செய்தனர். உடனடியாக நான் செய்த தவறு என்னவென்று தெரிந்தது. உடனே அதை அழித்து விட்டேன். நான் எப்போதுமே மகேஷ் பாபு மீது மதிப்பு கொண்டவன். வாரணாசி திரைப்படத்தில் அவரது பெயர் எத்தனை சாதனைகளை உருவாக்கப் போகிறது என எப்போதும் நம்புகிறேன். இது எந்த உள்நோக்கத்துடனும் மகேஷ் பாபுவையோ அல்லது அவரது ரசிகர்களையோ புண்படுத்தும் உள்நோக்கம் இல்லாமல் நடந்த தவறு.
நான் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் அன்று போக்கிரி படம் குறித்து அவருக்கு வெளியிட்டு இருந்த வாழ்த்து பதிவை பார்த்தாலே அவர் மீது நான் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். இந்த குறுகிய சமயத்தில் பல பேருடைய உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக நான் உண்மையாகவே என்னுடைய இதயத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படம் இன்னும் பத்து நாள்களில் வெளியாக இருக்கும் நிலையில் நான் இது போன்ற பதிவுகளை வெளியிடக்கூடாது என்கிற பொது அறிவு எனக்கு போதுமான அளவு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!