
நிவின்பாலிக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி கண்டனம்
இந்த நிலையில் இந்த முழு வழக்கையும் விசாரித்த வைக்கம் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு முழுக்க முழுக்க போலியான ஆதாரங்கள் மூலம் நிவின்பாலிக்கு எதிராக எப்ஐஆர் பதிய வேண்டும் என்பதற்காகவே ஜோடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல விசாரணையின் போது புகார்தாரர் நீதிமன்றத்தில் பேசுகிறோம் என்று தெரிந்தும் கூட தவறான தகவல்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். நிவின்பாலி மற்றும் இயக்குனர் அப்ரிட் ஷைன் இருவருக்கும் எதிராக தொடரப்பட்ட ஒரு மோசடியான வழக்கு என்று தனது தீர்ப்பில் புகார் கொடுத்த மனுதாரர் மீது காட்டமாக விமர்சித்துள்ளார். அந்த வகையில் இந்த வழக்கிலிருந்து இந்த நிவின்பாலி குற்றமற்றவர் என தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!