
திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல்
இந்த மூன்றாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறும்போது, “இந்த மூன்றாம் பாகம் முதல் பாகத்தின் பார்முலாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் ஒரு கதை சொல்லும் பாணியில் நகர்த்தி செல்லப்பட்டது. ஆனால் முதல் பாகத்தில் நிகழ்வுகள் மட்டுமே சொல்லப்பட்டன. அதே பார்முலாவில் தான் இந்த மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இன்னும் கூடுதல் எமோஷனாக இந்த மூன்றாம் பாகம் இருக்கும். இரண்டு பாகங்களில் நடந்ததை விட நாயகன் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் வேறு என்ன நடந்துவிட முடியும் என்பதை தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!