
கோல்கட்டாவில் திரையிட்ட படங்களை கேரள விழாவில் தடை செய்தது ஏன்? ; இயக்குனர் டாக்டர் பைஜூ கேள்வி
அதேசமயம் தொடர்ந்து விருதுக்கான படங்களை எடுத்து வருபவரும் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தனது படங்களை அனுப்பி வருபவருமான டாக்டர் பைஜூ இந்த விஷயத்தில் மாற்றுக்கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். இந்த திரைப்பட திருவிழாவில் திரையிட மறுக்கப்பட்ட பாலஸ்தீனிய படங்கள் இரண்டும், இலங்கையில் உருவான படம் ஒன்றும் இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுமதிக்கப்பட்டன. அது எப்படி ? மத்திய அரசு தடுத்திருந்தால் கோல்கட்டாவிலும் அவை திரையிடப்பட்டிருக்கக் கூடாதே ? அதனால் இதில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பதைவிட கேரள திரைப்பட அகாடமியில் தகுதியற்றவர்களை டம்மியாக நியமித்திருப்பது தான் இதுபோன்று 19 படங்களை தடை செய்து இருப்பதற்கு காரணம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!